×

5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு அளித்துள்ளது. ககன்தீப் சிங் பேடி ஐஏஎஸ்-க்கு, சுகாதாரத்துறை கூடுதல் தலைமைச் செயலராக பதவி உயர்வு; தீரஜ்குமார் ஐஏஎஸ்-க்கு தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் டிஜிட்டல் சேவை கூடுதல் தலைமைச் செயலராக பதவி உயர்வு; டாக்டர் எஸ்.விஜயகுமார் ஐஏஎஸ்-க்கு நகர்ப்புற வளர்ச்சி நிதியத்தின் கூடுதல் தலைமைச் செயலராக பதவி உயர்வு; டாக்டர் மணிவாசன் ஐஏஎஸ்-க்கு சுற்றுலா, கலாச்சார இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் தலைமைச் செயலராக பதவி உயர்வு; சென்னை துறைமுக ஆணைய தலைவரான சுனில்பாலிவால் ஐஏஎஸ்க்கு, அதே துறையில் கூடுதல் தலைமைச் செயலராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

 

The post 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Chennai ,Tamil Nadu government ,Kagandeep ,Dinakaran ,
× RELATED வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் தடையை...